Sunday, February 4, 2024

BT BRTE TAMIL ELIGIBILITY TEST ANSWER KEY 0N 04.02.2024

  BRTE 2023 / GAT 2023 

QUESTION  BOOKLET SERIES A SUBJECT 003 MATHEMATICS

PART A


1. 'கிடந்த' - என்ற சொல்லின் பகுபத உறுப்- பிலக்கணம் தருக


(A) கிடந்து + «


(B) கிட + ந்(த்) + த


(C) கிட + ந் + த் + அ


(D) கிட + த் (ந்) + த் + அ

ANSWER : D


2. விடுபட்ட சொற்களைக் கண்டுபிடிக்கவும் : இரத்தலும் போலும் கரத்தல்


தேற்றாதார் மாட்டு


(A) சாதலே, இம்மையும்.


(B) வாழ்தலே, மறத்தலும்


(C) ஈதலே, கனவிலும்


(D) காத்தலே, இன்மையும்


ANSWER C

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.

(குறள் 1054 )


3. செந்தாமரை + இச்சொல்லின் சரியான புணர்ச்சி விதிகளைத் தேர்ந்தெடுக்கவும்


(A) ஈறுபோதல் + இனமிகல்


(B) ஈறுபோதல் + ஆதிநீடல்


(C) ஈறுபோதல் + தன்னொற்று இரட்டல்


(D) ஈறுபோதல் + முன்னின்ற மெய் திரிதல்


ANSWER D

செந்தாமரை = செம்மை + தாமரை


ஈறுபோதல் என்ற விதிப்படி, மை கெட்டு செம் + தாமரை என்றானது.

முன்னின்ற மெய் திரிதல் என்ற விதிப்படி, (ம் திரிந்து ந் தோன்றி), செந்தமிழே எனப் புணர்ந்தது


4. முரண்படு மெய்ம்மை என்ற சொல் உணர்த்து- வது யாது ? சரியான விடையைக் காண்க.


(A) முரண்படுவது போல் முரண்படாத மெய்ம்மை


(B) முரண்படாதது போல் முரண்படுகிற மெய்ம்மை


(6) முரண் தொடை தொடுக்கப் பெறும் மெய்ம்மை


(D) எதிர்ச் சொல்லாக அமையப் பெறும் மெய்ம்மை



ANSWER : D


படிப்பவருக்கு முரண்படுவதுபோல இருக்கும்; உண்மையில் முரண்படாத – மெய்ம்மையைச் சொல்லுவது ‘முரண்படு மெய்ம்மை’ (paradox) எனப்படும்.

எ.கா:

“இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்படவேண்டும்?”


5. பொருத்துக:


அசைகள்                      வாய்பாடு


(அ) நேர் நேர் நிரை,  (1) புளிமாங்காய்


(ஆ) நிரை நிரை நேர், (2) கூவிளங்கனி


(இ) நிரை நேர் நேர் (3) தேமாங்கனி.


(ஈ) நேர் நிரை நிரை -(4) கருவிளங்காய்


                                           (5) தேமாங்காய்

(A) (3)(1)(4)(5)

(B)(4)(2)(1)(3)

(C)(3)(4)(2)(1)

(D)(3)(4)(1)(2)


ANSWER : D

நேர் நேர் நேர் (தே மாங் காய்)

நிரை நேர் நேர் (புளி மாங் காய்)

நிரை நிரை நேர் (கரு விளங் காய்)

நேர் நிரை நேர் (கூ விளங் காய்)

நேர் நேர் நிரை (தே மாங் கனி)

நிரை நேர் நிரை (புளி மாங் கனி)

நிரை நிரை நிரை (கரு விளங் கனி)

நேர் நிரை நிரை (கூ விளங் கனி)


6. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொட- ராக்குதல் வாழை இலைக்கு தமிழர் இடமுண்டு தனித்த பண்பாட்டில்


(A) வாழை இலைக்கு பண்பாட்டில் தமிழர் தனித்த இடமுண்டு


(B) வாழை இலைக்கு தனித்த பண்பாட்டில் இடமுண்டு தமிழர்


(C) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு


(D) தமிழர் தனித்த பண்பாட்டில் இடமுண்டு வாழை இலைக்கு

ANSWER C

TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION PAPER:


7. கீழ்க்கண்ட தொடர் எதனைக் குறிக்கிறது ?


பொசுக்குகிறது வெயில்


(A) எழுவாய்த் தொடர்


(B) வினைமுற்றுத் தொடர்


(C) விளித் தொடர்


(D) பெயரெச்சத் தொடர்


ANSWER B


8. 'மயலுறுத்து கின்ற இனிய வாசனையு- டன் வா' - இத்தொடரில் கோடிட்ட சொல் எவ்விதிப்படி புணர்ந்துள்ளது ?




(A) 'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்'


(B) 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே


(C) ''ல, ள' வேற்றுமையில் 'ற, ட' வும்''


(D) 'மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்'



ANSWER B


9. அமைச்சருக்குரிய கடமைகள் என, "நன்று. தீது, இவற்றை ஆராய்தல்; அதுமட்டுமின்றி அன்பும், அறனும் தவறாது காக்க வேண் டும்" என்று குறிப்பிடும் சங்க நூல் எது ?


(A) மதுரைக் காஞ்சி


(B) புறநானூறு


(C) கலித்தொகை


(D) சிறுபாணாற்றுப்படை


ANSWER: A

10. ''உணர்வு பொங்கி கவிதை படைக்கும் நேரங்களில் தடையாக விளங்கும் யாப்பு எளிதாக வடிவம் கொள்ள வித்திட்ட கவிஞர் யார் ?"


(A) நப்பூதனார்


(1) இளங்கோவடிகள்


(C) பாரதியார்


(D) பாரதிதாசன்

ANSWER: C


11. தவறான இணையைத் தேர்வு செய்க:


(A) அன்மொழித் தொகை - சிவப்புச் சட்டை பேசினார்


(B) பண்புத் தொகை - வட்டத்தொட்டி


(C) உவமைத் தொகை - முறுக்கு மீசை . வந்தார்


(D) உம்மைத் தொகை - அண்ணன்தம்பி

ANSWER: C முறுக்கு மீசை . வந்தார் - அன்மொழித் தொகை


12. சரியான விடையைத் தேர்வு செய்க


(1) மா.பொ.சிவஞானம் சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்


(2)சட்ட மேலவைத் தலைவராகப் பதவி வகித்துள்ளார்.


(3) பாரத மணி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் பணிபுரிந்தார்


(A) கூற்று (1) மற்றும் (3) சரி


(B) கூற்று (1), (2) சரி


(C) கூற்று (3) மட்டும் சரி


(D) கூற்று (1) மட்டும் சரி


ANSWER B


13. வஞ்சப்புகழ்ச்சி அணிக்குப் பொருத்தமான குறளைக் கண்டறிக


(A) தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான்:


(B) சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்


(C) மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில்.


(D) கரப்பிடும்பை இல்லாரைக் காணின் திரப்பிடும்பை எல்லாம் ஒழுங்கு கெடும்.


Answer A

14.பொருத்துக


(அ) வினையடி விகுதியுடன் சேர்வது (1) முதனிலை திரிந்த தொழிற் பெயர்


(ஆ) விகுதி பெறாத வினைப் பகுதி(2) விகுதி பெற்ற தொழிற்பெயர்


( )கேடு,   சூடு (3) முதனிலைத் தொழிற்பெயர்




(ஈ) எண், காலம், இடம்,பால் உணர்த்தாமல் வருவது(4) விகுதி பெறாத தொழிற்பெயர்

(5) தொழிற்பெயர்



(A)(2)(3)(1)(5)


(B)(4)(2)(3)(1)


(C)(3) (5)(4)(2)


(D)(2)(4)(5)(1)

ANSWER :  A

ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண் , இடம்,  காலம் ,பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.


வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற் பெயர் ஆகும்.

வினையடி  விகுதி    தொழிற்பெயர்

நட                   தல்              நடத்தல்

முதனிலைத் தொழிற்பெயர்- விகுதி பெறாமல் வினைப் பகுதியே  தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயராகும்.

அடி

அடித்தல் என்று பொருள்படும் போது  முதனிலைத்தொழிற் பெயர்களாகின்றன.


முதனிலை திரிந்த தொழிற்பெயர்-   இவை விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர்களாகும்.சுடுதல்           சூடு                 சுடு



15. துள்ளாத சீர்கள் தாழ்வாக வரும் யாப்பின் ஓசை - யாது ?


(A) கலிப்பா


(B) வஞ்சிப்பா


(C) வெண்பா


(D) ஆசிரியப்பா .

ANSWER : B 


16. பொருத்துக


(அ) பிழையா நன்மொழி (1) மதுரைக் காஞ்சி


(ஆ) பிறர் நோயும் தம் நோய் போல் (2) புறநானூறு.


(இ) செல்வத்துப் பயனே ஈதல்(3) அகநானூறு


(ஈ) நன்றும் தீதும் ஆய்தலும்)(4) கலித்தொகை


                                                         (5)நற்றிணை


(A)(3)(2)(5)(4)

(B)(1)(3)(4)(2)

(C)(5)(4)(2)(1)

(D)(2)(5)(3)(4)

ANSWER A


17. ஓர் இடத்திற்கு வருபவரின் வருகையை உறுதி செய்யும் பொருட்டு வழுவாகக் கூறும் வழுவமைதியின் பெயர் யாது ?


(A) இட வழுவமைதி.


(B) கால வழுவமைதி.


(C) பால் வழுவமைதி


(D) திணை வழுவமைதி


ANSWER B


18. சரியானகூற்று


(1) "நீரற வறியாக் கரகத்து' என்ற புறநானூற்றுப் பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறுகிறது.


(2) சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொருவகை ஆடல்களில் குடக் கூத்து என்ற ஆடலும் குறிப்பிடப்- படுகிறது.


(A) கூற்று (1) மட்டும் சரி, (2) -வது கூற்று தவறு


(B) கூற்று (1) மற்றும் (2) -ம் சரி


(C) கூற்று (1) மற்றும் (2) -ம் தவறு


(D) கூற்று (2) மட்டும் சரி, (1) -வது கூற்று தவறு

ANSWER B


19. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு (தொகுதி -1) தொகுப்பிலிருந்து இரு வேறு தலைப்பில் உள்ள பாடல்கள் எது ?


(A) பாவியக்கொத்து, நூறாசிரியம்


(B) கனிச்சாறு,எண்சுவை எண்பது


(C) மகபுகு வஞ்சி, பள்ளிப்பறவைகள்


(D) தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்

ANSWER D

20. 'அடிகள் நீரே அருளுக' - யார்,யாரிடம் கூறியது ?


(A) அரும்பத உரைகாரர் அடியார்க்கு நல்லாரிடம் கூறியது.


(B) அடியார்க்கு நல்லார் அரும்பத உரைகாரரிடம் கூறியது.


(C) இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்த னாரிடம் கூறியது.


(D சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடி களிடம் கூறியது

Answer D

மா என்ற சொல்லின் இரு பொருள் தருக


(A) மாமரம், அம்மா


(B) அம்மா, பூ


(C) பெரியது, விலங்கு


(D) சிறியது. நிலம்

ANSWER C

மரம்,விலங்கு,பெரிய,திருமகள்,அழகு,அறிவு,அளவு,அழைத்தல்,மேன்மை, வயல்,வண்டு என நிறைய பொருள்களை மா என்ற சொல்லுக்கு பொருளாகும்.


22 வட்டார மொழி, கொச்சை மொழி பிறமொழி சொற்கள் இடம்பெறாத தொடரினைக் கண்டறிக


(A) என்னொட பிரண்டு சுப்பையா என்று பெயர் காலேஜ்ல படிக்கான விடுமுறைக்கு வந்திருக்கான 


(B) என் நண்பன் சுப்பையான்னு பெயர் கல்லூரியில் படிக்கிறான் விடுமுறைக்கு வந்திருக்கான்


(C) என் நண்பன் சுப்பையா என்னும் பெயருடையவன் கல்லூரியில் படிக்- கின்றான். விடுமுறைக்கு வந்துள்ளான


(D) என் நண்பன் சுப்பையா என்னும் பெயருடையவன் காலேஜ்ல படிக் + கின்றான் லீவுக்கு வந்துள்ளான்

ANSWER C


23. "போலச் செய்தல்'' பண்பு எக்கலையின் ஆட்டம் ?


(A) புலி ஆட்டம்


(B) பொய்க்கால் குதிரை ஆட்டம்


(C) தப்பாட்டம்


(D) கரகாட்டம்


ANSWER B

24. ஜெயகாந்தன் படைப்புகளுள் திரைப்பட- 2 மான படைப்பு எது ?


(A) ஊருக்கு நூறு பேர்


(B) குருபீடம்


(C) ஒரு பிடி சோறு


(D) இன்னும் ஒரு பெண்ணின் கதை


ANSWER A 

25. "கரிசல் மண்ணின் வாழ்க்கையை " கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கிய படைப்பாளி யார் ?


(A) பா செயப்பிரகாசம்


(B) பூமணி


(C) கு. அழகிரிசாமி


(D) சோ. தர்மன்


ANSWER C

26. பிழையா நன்மொழி' என்று வாய்மையைக் கூறும் நூல் எது ?


(A) திருக்குறள்


(B) நற்றிணை


(C) ஐங்குறுநூறு


(D) புறநானூறு

ANSWER B

27. பொருத்தமில்லாததைக் கண்டறிக.


(A) சிறுகதைத் தொகுப்பு கரிப்பும் இனிப்பும்


(B) நாவல்புதியவார்ப்புகள்


(C) குறும்புதினம்பிரளயம் 

(D) புதினம் உன்னைப் போல் ஒருவன்

ANSWER B


28. கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் குறிப்பிட்டுள்ளார். செய்வதாகக் கம்பர்


(A) மருந்தும்


(B) ஈகையும்


(C) ஆற்றலும்


D) வீரமும்

Answer B


29. திருத்தணிகையுலா குறிப்பிடும் ஐம்பெருங்- காப்பிய வைப்புமுறை யாது ?


(A) சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக - சிந்தாமணி, வளையாபதி, குண்டல- கேசி


(B) சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணி - மேகலை, வளையாபதி, குண்டலகேசி


(C) சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணி- மேகலை, குண்டலகேசி, வளையாபதி


D) சிலப்பதிகாரம், வளையாபதி,மணி - மேகலை, குண்டலகேசி, சீவகசிந்தா- மணி

ANSWER B

30. குறில் -நெடில் மாற்றம் உணர்ந்து, கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான பொருளைத் தேர்க.


வளி  வாளி


வலித்தல்- காற்று


காற்று  - பாத்திரம்


காற்று - அம்பு


மகிழ்ச்சி- பாத்திரம்

ANSWER B


No comments:

Post a Comment

MATHEMATICAL GARDEN IDEAS

 MATHEMATICAL GARDEN IDEAS An illustration of a mathematical garden that visually represents the spiral root concept using plants and flower...